ஹதீஸ்கள்
#7520
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான், “அல்லாஹ்விடம் மிகப்பெரிய பாவம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணைகற்பிப்பதாகும்” என்று பதிலளித்தார்கள். நான், “நிச்சயமாக அது பெரும் பாவம்தான்” என்று சொல்லிவிட்டு, “பின்னர் எது?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உன் குழந்தை உன்னுடன் உணவு உண்ணும் என்றஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்” என்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “பிறகு உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று பதிலளித்தார்கள்.162 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن منصور، عن ابي وايل، عن عمرو بن شرحبيل، عن عبد الله، قال سالت النبي صلى الله عليه وسلم اى الذنب اعظم عند الله قال " ان تجعل لله ندا وهو خلقك ". قلت ان ذلك لعظيم. قلت ثم اى قال " ثم ان تقتل ولدك تخاف ان يطعم معك ". قلت ثم اى قال " ثم ان تزاني بحليلة جارك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7520
- Book Index
- 145
Grades
- -
