ஹதீஸ்கள்
#7515
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள், “நீங்கள்தானே உங்கள் சந்ததிகளைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிய ஆதம்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அல்லாஹ் தன் தூதுச் செய்திகளை அனுப்பவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூசா நீங்கள்தானே! அப்படிப்பட்ட நீங்களா, நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைக் குறை சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். (இந்தப் பதில் மூலம்) ஆதம் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களை வென்றுவிட்டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.156 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7515
- Book Index
- 140
Grades
- -