ஹதீஸ்கள்
#7509
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் “என் இறைவா! எவரது உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களைச் சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!” என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் “எவரது உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களைச் சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக” என்று மீண்டும் பிரார்த்திப்பேன். இதை அறிவித்த அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘சிறிதளவேனும்’ என்று கூறியபோது) விரல்நுனியைக் காட்டியதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது” என்று கூறினார்கள்.150 அத்தியாயம் :
حدثنا يوسف بن راشد، حدثنا احمد بن عبد الله، حدثنا ابو بكر بن عياش، عن حميد، قال سمعت انسا رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " اذا كان يوم القيامة شفعت، فقلت يا رب ادخل الجنة من كان في قلبه خردلة. فيدخلون، ثم اقول ادخل الجنة من كان في قلبه ادنى شىء ". فقال انس كاني انظر الى اصابع رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7509
- Book Index
- 134
Grades
- -
