ஹதீஸ்கள்
#7502
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) நின்றது. அல்லாஹ் “சற்று பொறு” என்றான். “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்றது உறவு. உடனே அல்லாஹ் “(உறவே!) உன்னைப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன்; உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு “ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்றது உறவு. “இது உனக்காக நடக்கும்” என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?” எனும் (47:22 ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.144 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7502
- Book Index
- 127
Grades
- -