ஹதீஸ்கள்
#7480
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகர மக்களை முற்றுகையிட்டார்கள். ஆனால், அதை அவர்கள் வெற்றி கொள்ளவில்லை. “அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் சென்றுவிடுவோம்” என்று சொன்னார்கள். முஸ்லிம்கள், “நாம் (கோட்டையை) வெற்றி கொள்ளாமலேயே திரும்பிச் செல்வதா?” என்று கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் (உங்கள் விருப்பம்). முற்பகலிலேயே போருக்குச் செல்லுங் கள்” என்று சொன்னார்கள். மக்களும் அவ்வாறே போருக்குச் செல்ல அவர்களுக்குக் காயங்கள் பல ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் (அச்சமயம்) “அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். அது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டியது போன்றிருந்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள்.122 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7480
- Book Index
- 106
Grades
- -