ஹதீஸ்கள்
#7471
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருமுறை நாங்கள் தொழாமல் உறங்கிவிட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், தான் நாடியபோது உங்கள் உயிர்களைக் கைப்பற்றி, தான் நாடியபோது அவற்றைத் திருப்பி அனுப்புகின்றான்” என்று சொன்னார்கள். பிறகு மக்கள் தங்கள் இயற்கைக் கடன்களை நிறைவு செய்துகொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டார்கள். அதற்குள் சூரியன் உதயமாகி வெளுத்துவிட்டிருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து (தவறிப்போன ஃபஜ்ர் தொழுகையை மக்களுடன்) தொழுதார்கள்.113 அத்தியாயம் :
حدثنا ابن سلام، اخبرنا هشيم، عن حصين، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، حين ناموا عن الصلاة، قال النبي صلى الله عليه وسلم " ان الله قبض ارواحكم حين شاء، وردها حين شاء ". فقضوا حوايجهم وتوضيوا الى ان طلعت الشمس وابيضت فقام فصلى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7471
- Book Index
- 97
Grades
- -
