ஹதீஸ்கள்
#7470
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) கிராமவாசி ஒருவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். “கவலைப்படாதீர்கள்! (உமது நோய்) அல்லாஹ் நாடினால் (உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்தும்” என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி “தூய்மைப்படுத்துமா? (இல்லை.) மாறாக, வயதான கிழவனைப் பீடிக்கின்ற கொதிக்கும் காய்ச்சல் ஆகும். அந்தக் காய்ச்சல் இவனை மண்ணறைகளைச் சந்திக்க வைத்துவிடும்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் சரி (அவ்வாறுதான் ஆகும்)” என்று சொன்னார்கள்.112 அத்தியாயம் :
حدثنا محمد، حدثنا عبد الوهاب الثقفي، حدثنا خالد الحذاء، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم دخل على اعرابي يعوده فقال " لا باس عليك طهور، ان شاء الله ". قال قال الاعرابي طهور، بل هي حمى تفور على شيخ كبير، تزيره القبور. قال النبي صلى الله عليه وسلم " فنعم اذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7470
- Book Index
- 96
Grades
- -
