ஹதீஸ்கள்
#7460
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கட்டளையை நிலைநிறுத்தும் ஒரு குழுவினர் என் சமுதாயத்தாரிடையே இருந்துகொண்டேயிருப்பர். அவர்களை நம்ப மறுப்பவர்களும் சரி, அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களும் சரி அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருந்துகொண்டிருக்க அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும். இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவித்தபோது அங்கிருந்த மாலிக் பின் யுகாமிர் (ரஹ்) அவர்கள், “முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டில் இருப்பார்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்று கூற, முஆவியா (ரலி) அவர்கள், “இதோ, இந்த மாலிக் ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டிலிருப்பார்கள்’ என்று முஆத் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்” என்றார்கள்.100 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا الوليد بن مسلم، حدثنا ابن جابر، حدثني عمير بن هاني، انه سمع معاوية، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " لا يزال من امتي امة قايمة بامر الله، ما يضرهم من كذبهم، ولا من خالفهم، حتى ياتي امر الله وهم على ذلك ". فقال مالك بن يخامر سمعت معاذا يقول وهم بالشام. فقال معاوية هذا مالك يزعم انه سمع معاذا يقول وهم بالشام
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7460
- Book Index
- 86
Grades
- -
