ஹதீஸ்கள்
#7455
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்), “ஜிப்ரீலே! நீங்கள் இப்போது எம்மைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?” என்று கேட்டார்கள். அப்போதுதான், “(நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுபடியே தவிர (வானவர்களாகிய) நாங்கள் இறங்குவ தில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்குச் சொந்தமான வையே! (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்” எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது. இதுவே முஹம்மத் (ஸல்) அவர் களு(டைய கேள்வி)க்குப் பதிலாக அமைந்தது.95 அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، حدثنا عمر بن ذر، سمعت ابي يحدث، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم قال " يا جبريل ما يمنعك ان تزورنا اكثر مما تزورنا ". فنزلت {وما نتنزل الا بامر ربك له ما بين ايدينا وما خلفنا} الى اخر الاية. قال هذا كان الجواب لمحمد صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7455
- Book Index
- 81
Grades
- -
