ஹதீஸ்கள்
#7449
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கமும் நரகமும் தம் இறைவனிடம் வாக்குவாதம் செய்தன. அப்போது சொர்க்கம், “என் இறைவா! எனக்கென்ன ஆயிற்று? மக்களில் பலவீனர்களும் சாமானியர்களும்தானே எனக்குள் நுழைகின்றார்கள்!” என்று கேட்டது. நரகம் “நான் தற்பெருமைக்காரர்களுக்கு மட்டுமே உரியவனாகிவிட்டேனே!” என்று முறையிட்டது. அப்போது அல்லாஹ் சொர்க்கத்தி டம், “நீ என் கருணை(யின் பரிசு) ஆவாய்” என்று சொன்னான். நரகத்திடம் நீ நான் அளிக்கும் வேதனை ஆவாய். நான் விரும்புகின்றவர்களை உன் மூலம் தண்டிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு -இரண்டையும் நோக்கி- “உங்கள் ஒவ்வொருவரையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்” என்று கூறுவான். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன், தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைக்கின்றான். நரகத்தில் அவர்கள் போடப்படும்போது, “இன்னும் இருக்கிறதா?” என அது மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க, அது நிரம்பிவிடும்; அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும்; போதும்; போதும் என அது கூறும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.89 அத்தியாயம் :
حدثنا عبيد الله بن سعد بن ابراهيم، حدثنا يعقوب، حدثنا ابي، عن صالح بن كيسان، عن الاعرج، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اختصمت الجنة والنار الى ربهما فقالت الجنة يا رب ما لها لا يدخلها الا ضعفاء الناس وسقطهم. وقالت النار يعني اوثرت بالمتكبرين. فقال الله تعالى للجنة انت رحمتي. وقال للنار انت عذابي اصيب بك من اشاء، ولكل واحدة منكما ملوها قال فاما الجنة فان الله لا يظلم من خلقه احدا، وانه ينشي للنار من يشاء فيلقون فيها فتقول هل من مزيد. ثلاثا، حتى يضع فيها قدمه فتمتلي ويرد بعضها الى بعض وتقول قط قط قط
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7449
- Book Index
- 75
Grades
- -
