ஹதீஸ்கள்
#7448
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவருடைய மகன் இறக்கும் தறுவாயில் இருந்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் வந்து சேரும்படி அந்தப் புதல்வியார் சொல்லியனுப்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியதாகும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, பொறுமையைக் கைகொள்வீராக; நன்மையை எதிர்பார்ப்பீராக” என்று சொல்லியனுப்பினார்கள். (மீண்டும்) அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் (கட்டாயம் தம்மிடம் வர வேண்டுமெனக்) கூறியனுப்பினார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். நானும், முஆத் பின் ஜபல் (ரலி), உபை பின் கஅப் (ரலி), உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) ஆகியோரும் அவர்களுடன் எழுந்தோம். நாங்கள் (வீட்டுக்குள்) நுழைந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்தச் சிறுவரைக் கொடுத்தார்கள். அந்தச் சிறுவரின் மூச்சு (சுவாசிக்க முடியாமல்) நெஞ்சுக்குள் திணறிக்கொண்டிருந்தது. -அது தோல் துருத்தியைப் போன்று (ஏறி இறங்கிக்கொண்டு) இருந்தது என்று அறிவிப்பாளர் கூறியதாக நான் (அபூ உஸ்மான் அந்நஹ்தீ) எண்ணுகிறேன்.- (இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழுதார்கள். அப்போது (அங்கிருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் அழுகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்” என்று சொன்னார்கள்.88 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7448
- Book Index
- 74
Grades
- -