ஹதீஸ்கள்
#7446
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான். ஒருவர் (தமது) விற்பனைப் பொரு ளுக்கு (அதைக் கொள்முதல் செய்தபோது உண்மையில்) தாம் கொடுத்த விலையை விட அதிக விலை கொடுத்ததாகப் பொய்ச் சத்தியம் செய்கிறார். மற்றொருவர், ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் ஒன்றுகூடும் நேரத்தில்) பொய்ச் சத்தியம் செய்கிறார். வேறொருவர், தமது தேவைக்குப் போக மிஞ்சிய தண்ணீரை (வழிப் போக்கருக்குத் தராமல்) தடுக்கின்றார். (அவரிடம்) அல்லாஹ் மறுமை நாளில் “நீ தேடிச் சம்பாதிக்காத பொருளை (நீரை) நீ தர மறுத்ததைப் போன்று இன்று என் அருளை உனக்கு வழங்க மறுக்கிறேன்” என்று கூறுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.86 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، عن عمرو، عن ابي صالح، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر اليهم رجل حلف على سلعة لقد اعطى بها اكثر مما اعطى وهو كاذب، ورجل حلف على يمين كاذبة بعد العصر ليقتطع بها مال امري مسلم، ورجل منع فضل ماء فيقول الله يوم القيامة، اليوم امنعك فضلي، كما منعت فضل ما لم تعمل يداك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7446
- Book Index
- 72
Grades
- -
