ஹதீஸ்கள்
#7409
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். அவர்களுடன் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டும் என்றும், அதே நேரத்தில் அப்பெண்கள் கருவுற்றுவிடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். ஆகவே, புணர்ச்சி இடைமுறிப்பு (‘அஸ்ல்’) செய்துகொள்வது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை. ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை தான் படைக்கவிருப்பவற்றை எழுதிமுடித்துவிட்டான்” என்று சொன்னார்கள். மற்றோர் அறிவிப்பில் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியுள்ளார்கள்: “படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.47 அத்தியாயம் :
حدثنا اسحاق، حدثنا عفان، حدثنا وهيب، حدثنا موسى هو ابن عقبة حدثني محمد بن يحيى بن حبان، عن ابن محيريز، عن ابي سعيد الخدري، في غزوة بني المصطلق انهم اصابوا سبايا فارادوا ان يستمتعوا بهن ولا يحملن فسالوا النبي صلى الله عليه وسلم عن العزل فقال " ما عليكم ان لا تفعلوا، فان الله قد كتب من هو خالق الى يوم القيامة ". وقال مجاهد عن قزعة سمعت ابا سعيد فقال قال النبي صلى الله عليه وسلم " ليست نفس مخلوقة الا الله خالقها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7409
- Book Index
- 38
Grades
- -
