ஹதீஸ்கள்
#7406
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ, உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை வேறுசிலர் அனுபவிக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, “உங்களுக்கு மேலிருந்து” என்பதைக் கேட்டவுடன் “(இறைவா!) உன் (திரு)முகத்தால் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லது உங்கள் கால்களுக்குக் கீழிலிருந்து” என்பதைக் கேட்டவுடனும் “(இறைவா!) உன் (திரு)முகத்தால் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்றார்கள். “உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து...” என்பதைக் கேட்டவுடன் “இது (முந்தைய வேதனைகளைவிட) மிக எளிதானது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.43 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7406
- Book Index
- 35
Grades
- -