ஹதீஸ்கள்
#7398
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இங்கு இப்போதுதான் இணைவைப்பிலிருந்து விலகி (இஸ்லாத்தை ஏற்று) வந்த சில சமுதாயத்தார் உள்ளனர். அவர்கள் எங்களிடம் இறைச்சி கொண்டுவருகிறார்கள். அவர்கள் பிராணிகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறுகிறார்களா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் அதைச் சாப்பிடலாமா)?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (அதன் மீது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உண்ணுங்கள்” என்று பதில் சொன்னார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.33 அத்தியாயம் :
حدثنا يوسف بن موسى، حدثنا ابو خالد الاحمر، قال سمعت هشام بن عروة، يحدث عن ابيه، عن عايشة، قالت قالوا يا رسول الله ان هنا اقواما حديثا عهدهم بشرك، ياتونا بلحمان لا ندري يذكرون اسم الله عليها ام لا. قال " اذكروا انتم اسم الله وكلوا ". تابعه محمد بن عبد الرحمن والدراوردي واسامة بن حفص
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7398
- Book Index
- 27
Grades
- -
