ஹதீஸ்கள்
#7384
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்போது நரகம், “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும்; இறுதியில் அகிலங்களின் அதிபதி(யான அல்லாஹ்), நரகத்தில் தனது பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக்கொள்ளும். பிறகு, “போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!” என்று கூறும். சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர் களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்து வான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.19 அத்தியாயம் :
حدثنا ابن ابي الاسود، حدثنا حرمي، حدثنا شعبة، عن قتادة، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " يلقى في النار ". وقال لي خليفة حدثنا يزيد بن زريع حدثنا سعيد عن قتادة عن انس. وعن معتمر سمعت ابي عن قتادة عن انس عن النبي صلى الله عليه وسلم قال " لا يزال يلقى فيها وتقول هل من مزيد. حتى يضع فيها رب العالمين قدمه فينزوي بعضها الى بعض، ثم تقول قد قد بعزتك وكرمك. ولا تزال الجنة تفضل حتى ينشي الله لها خلقا فيسكنهم فضل الجنة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7384
- Book Index
- 14
Grades
- -
