ஹதீஸ்கள்
#7353
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் உமர் (ரலி) (அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள். உமர் ஏதோ வேலையாக இருப்பதாகத் தோன்றவே அபூமூசா திரும்பிச் சென்றுவிட்டார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள், “நான் அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூமூசா-ரலி) அவர்களது குரலைக் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இப்படிச் செய்ததற்கு (வராமலிருந்ததற்கு)க் காரணம் என்ன?” என்று (அவர்களிடம்) கேட்க, அபூமூசா (ரலி) அவர்கள், “(மூன்று முறை முகமன் (சலாம்) கூறியும் சந்திக்க அனுமதி கிடைக்காவிட்டால்) திரும்பிச் சென்றுவிடும்படிதான் நமக்குக் கட்டளை யிடப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “இதற்கு ஒரு சான்றை நீங்கள் என்னிடம் கொண்டுவாருங்கள்; இல்லையேல், உங்கள்மீது நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று சொன்னார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் (நபியின் இந்தக் கட்டளைக்கு வேறு சாட்சி எவரும் இருக்கிறாரா? என்று அறிவதற்காக) அன்சாரிகளின் ஓர் அவைக்குச் சென்றார்கள். அங்கிருந்தவர்கள், “எங்களில் (வயதில்) சிறியவர்தான் இதற்குச் சாட்சியமளிப்பார்” என்றனர். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் எழுந்துவந்து, “(ஆம்) நமக்கு இப்படித்தான் கட்டளையிடப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளில் இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! கடைவீதிகளில் வியாபாரம் செய்துவந்தது என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டுள்ளது” என்று சொன்னார்கள்.84 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7353
- Book Index
- 80
Grades
- -