ஹதீஸ்கள்
#7333
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹுத் மலை தென்பட்டது. உடனே, “இந்த மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு மலைகளுக்கு இடையில் இருக்கும் (மதீனா நகர) பூமியைப் புனிதமானதென அறிவிக்கிறேன்” என்று சொன்னார்கள்.62 “இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக் கின்றது; நாமும் இதை நேசிக்கின்றோம்” என்ற இதே நபிமொழியை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களும் அறிவித்துள் ளார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7333
- Book Index
- 62
Grades
- -