ஹதீஸ்கள்
#7313
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65 ஆவது) இறைவசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றபோது, “உங்களுக்கு மேலிருந்தோ” என்பதைக் கேட்டவுடன், “(இறைவா!) உன் சன்னிதானத்தில் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ‘உங்கள் கால்களின் கீழிருந்தோ’ என்பதைக் கேட்டவுடன் “உன் சன்னி தானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்கள். “அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து, உங்களில் சிலர் வேறுசிலர் தரும் துன்பத்தைச் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” என்பதைக் கேட்டவுடன், “(பிரிப்பதும் துன்பத்தைச் சுவைக்கச் செய்வதுமான) இந்த இருவித வேதனைகளும் (முந்தைய வேதனைகளைவிட) ‘மிக எளிதானவை’ அல்லது ‘சுலபமானவை’ என்று சொன்னார் கள்.44 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال عمرو سمعت جابر بن عبد الله رضى الله عنهما يقول لما نزل على رسول الله صلى الله عليه وسلم {قل هو القادر على ان يبعث عليكم عذابا من فوقكم} قال " اعوذ بوجهك ". {او من تحت ارجلكم} قال " اعوذ بوجهك ". فلما نزلت {او يلبسكم شيعا ويذيق بعضكم باس بعض} قال " هاتان اهون او ايسر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7313
- Book Index
- 44
Grades
- -
