ஹதீஸ்கள்
#7312
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
முஆவியா (ரலி) அவர்கள் தமது உரையில் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் (விளக்கமுடைய) அறிஞராக்குகின்றான். நான் பங்கிடுபவன் மட்டுமே. அல்லாஹ்தான் கொடுக்கிறான். இந்தச் சமுதாயத்தின் நிலை (சத்திய மார்க்கத்தின்படி) செம்மையானதாகவே இருக்கும். ‘மறுமை நாள் வரும்வரை’ அல்லது ‘அல்லாஹ்வின் கட்டளை (உலக முடிவு நாள்) வரும்வரை’ ‘‘ என்று சொல்ல நான் கேட்டேன். இதை ஹுமைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.43 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7312
- Book Index
- 43
Grades
- -