ஹதீஸ்கள்
#7294
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்தபோது நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) வெளியே வந்து லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள், (தொழுகை முடிந்து) சலாம் கொடுத்தபிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதேறி உலக முடிவுநாள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நாளில் பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். பிறகு, “எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் (என்னிடம்) அவர் கேட்கலாம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இடத்தில் நான் இருக்கும்வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்காமóருக்கமாட்டேன்” என்றும் சொன்னார்கள். அப்போது மக்களின் அழுகை அதிகமாயிற்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் எங்கு செல்வேன் (சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்கா)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘நரகத்திற்கு’ என்று பதிலளித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தந்தை ஹுதாஃபா” என்று கூறிவிட்டு, “கேளுங்கள் என்னிடம்! கேளுங்கள் என்னிடம்” எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். (நபியவர்களின் இந்நிலையைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதர் எனவும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியபோது மௌனமாக இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! சற்றுமுன் நான் தொழுதுகொண்டிருக்கையில் இந்தச் சுவரில் எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று (வேறெந்த நாளிலும்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை” என்று சொன்னார்கள்.22 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7294
- Book Index
- 25
Grades
- -