ஹதீஸ்கள்
#7291
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. இவ்வாறு மக்கள் அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்டபோது நபி அவர்கள் கோபமடைந்து, “(நீங்கள் விரும்பிய எதைப் பற்றி வேண்டுமானாலும்) என்னிடம் கேளுங்கள்” என்று சொன்னார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஹுதாஃபாதான் உன் தந்தை” என்று சொன்னார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் “ஷைபாவால் விடுதலை செய்யப்பட்ட சாலிம்தான் உன் தந்தை” என்று சொன்னார்கள். (இக்கேள்விகளால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட கோபக் குறியை உமர் (ரலி) அவர்கள் கண்டபோது, “நாங்கள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்” என்று கூறினார்கள்.19 அத்தியாயம் :
حدثنا يوسف بن موسى، حدثنا ابو اسامة، عن بريد بن ابي بردة، عن ابي بردة، عن ابي موسى الاشعري، قال سيل رسول الله صلى الله عليه وسلم عن اشياء كرهها، فلما اكثروا عليه المسالة غضب وقال " سلوني ". فقام رجل فقال يا رسول الله من ابي قال " ابوك حذافة ". ثم قام اخر فقال يا رسول الله من ابي فقال " ابوك سالم مولى شيبة ". فلما راى عمر ما بوجه رسول الله صلى الله عليه وسلم من الغضب قال انا نتوب الى الله عز وجل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7291
- Book Index
- 22
Grades
- -
