ஹதீஸ்கள்
#7287
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (கிரகணத் தொழுகை) தொழுதுகொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். நான் “மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் தமது கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து, “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)” என்று கூறினார்கள். நான் “ஏதேனும் அடையாளமா?” என்று கேட்டேன். “ஆம்” என்பதைப் போன்று ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தலையால் சைகை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் -சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும்- இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு ‘வஹீ’ (இறைஅறிவிப்பு) அறிவிக்கப்பட்டது. (மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), ஒரு ‘முஃமின்’ (இறைநம்பிக்கையாளர்) அல்லது ‘முஸ்லிம்’ ‘(இவர்கள்) முஹம்மத் (ஸல்) ஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டுவந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்’ என்று பதிலளிப்பார். அப்போது, ‘(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்’ என (அவரிடம்) சொல்லப்படும். ‘நயவஞ்சகர்’ அல்லது ‘சந்தேகம் கொண்டவர்’ (மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), ‘மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவார்.16 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7287
- Book Index
- 18
Grades
- -