ஹதீஸ்கள்
#7247
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (நோன்பின்போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் ‘தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும்தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.) அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் தம் இரு கைகளையும் ஒன்றுசேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரு சுட்டுவிரல்களையும் நீட்டிக்காட்டினார்கள்.5 அத்தியாயம் :
حدثنا مسدد، عن يحيى، عن التيمي، عن ابي عثمان، عن ابن مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يمنعن احدكم اذان بلال من سحوره، فانه يوذن او قال ينادي ليرجع قايمكم، وينبه نايمكم، وليس الفجر ان يقول هكذا وجمع يحيى كفيه حتى يقول هكذا ". ومد يحيى اصبعيه السبابتين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7247
- Book Index
- 2
Grades
- -
