ஹதீஸ்கள்
#7242
ஸஹீஹ் அல்-புகாரீ - Wishes
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்க வேண்டாம் என்று தடை விதித்தார்கள். மக்கள், “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் யார் என்னைப் போல் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கின்ற நிலையில் நான் உள்ளேன்” என்று பதிலளித்தார்கள். மக்கள் (தொடர்நோன்பைக்) கைவிட மறுத்தபோது அவர்களுடன் சேர்ந்து ஒருநாளும் அதன்பிறகு ஒரு நாளும் நபியவர்கள் தொடர்நோன்பு நோற்றார்கள். அதற்குள் (அடுத்த) மாதப் பிறையைக் கண்டார்கள். அப்போது “பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால், உங்களை இன்னும் (தொடர்நோன்பை) அதிகமாக்க வைத்திருப்பேன்” என்று -அவர்களைக் கண்டிப்பவர்களைப் போன்று- சொன்னார்கள்.19 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، وقال الليث، حدثني عبد الرحمن بن خالد، عن ابن شهاب، ان سعيد بن المسيب، اخبره ان ابا هريرة قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال، قالوا فانك تواصل. قال " ايكم مثلي، اني ابيت يطعمني ربي ويسقين ". فلما ابوا ان ينتهوا واصل بهم يوما ثم يوما ثم راوا الهلال فقال " لو تاخر لزدتكم ". كالمنكل لهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wishes
- Hadith Index
- #7242
- Book Index
- 17
Grades
- -
