ஹதீஸ்கள்
#7241
ஸஹீஹ் அல்-புகாரீ - Wishes
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளான்) மாதக் கடைசியில் தொடர்நோன்பு நோற்றார் கள். (இதைக் கண்டு) மக்கள் சிலரும் தொடர்நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “எனக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாட்கள்) நீட்டிக்கப்பட்டாலும் என்னால் தொடர்நோன்பு நோற்க முடியும். அப்போது (என்னைப் பார்த்து தொடர் நோன்பு நோற்று, வணக்க வழிபாடுகளில்) மிதமிஞ்சி ஈடுபடுபவர்கள் தங்களது போக்கைக் கைவிட வேண்டியது வரும். நான், உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கும் நிலையில் நான் உள்ளேன்” என்று சொன்னார்கள்.18 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عياش بن الوليد، حدثنا عبد الاعلى، حدثنا حميد، عن ثابت، عن انس، رضى الله عنه قال واصل النبي صلى الله عليه وسلم اخر الشهر، وواصل اناس، من الناس فبلغ النبي صلى الله عليه وسلم فقال " لو مد بي الشهر لواصلت وصالا يدع المتعمقون تعمقهم، اني لست مثلكم، اني اظل يطعمني ربي ويسقين ". تابعه سليمان بن مغيرة عن ثابت عن انس عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wishes
- Hadith Index
- #7241
- Book Index
- 16
Grades
- -
