ஹதீஸ்கள்
#7236
ஸஹீஹ் அல்-புகாரீ - Wishes
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது எங்களுடன் நபி (ஸல்) அவர்களும் மண்ணைச் சுமந்து எடுத்துவந்தார்கள். அவர்கள் (சுமந்துவந்த) மண் அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்திருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “(இறைவா!) நீ இல்லாவிட்டால்நாங்கள் நல்வழி அடைந்திருக்கமாட்டோம்.நாங்கள் தர்மம் செய்யதிருக்கவுமாட்டோம்;தொழுதிருக்கவுமாட்டோம்.ஆகவே, எங்கள்மீது அமைதியை இறக்கியருள்வாயாக! ‘இவர்கள்’ அல்லது ‘(குறைஷித்) தலைவர்கள்’ எங்கள்மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்” என்று (இறுதி வரியைக்) குரலை உயர்த்தி (பாடலில்) கூறினார்கள்.12 அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرني ابي، عن شعبة، حدثنا ابو اسحاق، عن البراء بن عازب، قال كان النبي صلى الله عليه وسلم ينقل معنا التراب يوم الاحزاب، ولقد رايته وارى التراب بياض بطنه يقول " لولا انت ما اهتدينا نحن، ولا تصدقنا ولا صلينا، فانزلن سكينة علينا، ان الالى وربما قال الملا قد بغوا علينا، اذا ارادوا فتنة ابينا " ابينا يرفع بها صوته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wishes
- Hadith Index
- #7236
- Book Index
- 11
Grades
- -
