ஹதீஸ்கள்
#7236
ஸஹீஹ் அல்-புகாரீ - Wishes
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது எங்களுடன் நபி (ஸல்) அவர்களும் மண்ணைச் சுமந்து எடுத்துவந்தார்கள். அவர்கள் (சுமந்துவந்த) மண் அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்திருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “(இறைவா!) நீ இல்லாவிட்டால்நாங்கள் நல்வழி அடைந்திருக்கமாட்டோம்.நாங்கள் தர்மம் செய்யதிருக்கவுமாட்டோம்;தொழுதிருக்கவுமாட்டோம்.ஆகவே, எங்கள்மீது அமைதியை இறக்கியருள்வாயாக! ‘இவர்கள்’ அல்லது ‘(குறைஷித்) தலைவர்கள்’ எங்கள்மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்” என்று (இறுதி வரியைக்) குரலை உயர்த்தி (பாடலில்) கூறினார்கள்.12 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wishes
- Hadith Index
- #7236
- Book Index
- 11
Grades
- -