ஹதீஸ்கள்
#7225
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குச் செல் லாமல் பின்வாங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுடன் பேச வேண்டாம் என்று முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள். இந்த நிலையிலேயே நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். பிறகு அல்லாஹ் எங்களை மன்னித்த செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிட மிருந்து அவர்களின் புதல்வர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள். அன்னார்தான் தம் தந்தை கஅப் (ரலி) அவர்கள் (முதுமையடைந்து) கண்பார்வை இழந்துவிட்டபோது அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் செல்பவர்களாக இருந்தார்கள்.86 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7225
- Book Index
- 84
Grades
- -