ஹதீஸ்கள்
#7216
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தை என்னிடமிருந்து பெறுங்கள்” என்று கோரினார். நபி (ஸல்) அவர்களும் அவரிடம் இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தைப் பெற்றார்கள். பிறகு அவர் அடுத்த நாள் காய்ச்சலுடன் வந்து, “(என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து) என்னை விடுவித்துவிடுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (விடுவிக்க) மறுத்துவிட்டார்கள். அவர் திரும்பிச் சென்றபோது, “மதீனா நகரம் கொல்லனின் உலை போன்றதாகும்; அது தன்னிலுள்ள தீயவர்களை (சோதனைகள் மூலம்) வெளியேற்றி நல்ல வர்களைத் தூய்மைப்படுத்துகின்றது” என்று சொன்னார்கள்.80 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7216
- Book Index
- 76
Grades
- -