ஹதீஸ்கள்
#7192
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களும் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சங்கனிகள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டனர். (வழியில் இருவரும் பிரிந்துவிட்டனர்.) அப்போது “அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு ‘குழியில்’ அல்லது ‘நீர்நிலையில்’ போடப்பட்டுவிட்டார்” என்ற செய்தி முஹய்யிஸா (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, முஹய்யிஸா (ரலி) அவர்கள் (அப்பகுதி மக்களான) யூதர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள்தான் அவரைக் கொன்றுவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை நாங்கள் கொல்லவில்லை” என்று சொன்னார்கள். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப் பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவருடைய சகோதரர் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் -இவர் வயதில் மூத்தவர்- (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். அப்போது கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா (ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி (ஸல்) அவர்கள், முஹய்யிஸா (ரலி) அவர்களிடம், “வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு” என்று சொன்னார்கள். எனவே, ஹுவய்யிஸா (ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா (ரலி) அவர்கள் பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒன்று, உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்” என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். “நாங்கள் அவரைக் கொல்லவில்லை” என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா (ரலி), முஹய்யிஸா (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) ஆகியோரிடம், “(யூதர்கள்தான் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களி டம் சத்தியம் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள், அதற்கு அவர்கள் (மூவரும்), “யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே! (பொய்ச் சத்தியம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்களே)” என்று கூறினர். ஆகவே, கொல்லப்பட்டவருக்கான இழப்பீடாக நூறு ஒட்டகங்களை நபி (ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து வழங்கினார்கள். இறுதியில் (அவர்கள் கூடியிருந்த) அந்த வீட்டுக்குள் அந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அதில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது.59 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7192
- Book Index
- 54
Grades
- -