ஹதீஸ்கள்
#7189
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துக்கூறி அவர்களை அழைப்பதற்காக) அனுப்பி னார்கள். அவர்களுக்கு ‘அஸ்லம்னா’ (‘நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண் டோம்’) என்று திருத்தமாகச் சொல்லவர வில்லை. ஆகவே, அவர்கள், ‘ஸபஃனா’, ‘ஸபஃனா’ (‘நாங்கள் மதம் மாறிவிட்டோம்; நாங்கள் மதம் மாறிவிட்டோம்’) என்று சொன்னார்கள். உடனே, காலித் (ரலி) அவர்கள் அம்மக்களைக் கொல்லவும் சிறைபிடிக்கவும் தொடங்கினார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவரால் கைது செய்யப்பட்டவரை ஒப்படைத்தார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டேன். என் தோழர்களில் எவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டார்” என்று சொன்னேன். இதை நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) தெரிவித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! ‘காலித் பின் அல்வலீத்’ செய்த(த)வற்றுக்கும் எனக்கும் தொடர் பில்லையென்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருமுறை சொன் னார்கள்.56 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7189
- Book Index
- 51
Grades
- -