ஹதீஸ்கள்
#7169
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு மனிதன்தான். நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கலாம். நான் கேட்பதை வைத்து அதற்கேற்ப தீர்ப்பு வழங்கிவிடுவேன். எவருக்கு நான் அவரது சகோதரரின் உரிமையில் ஒன்றை (உண்மை நிலை அறியாமல் வாதங்களைவைத்து) கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பளித்து விடுகின்றேனோ அதை அவர் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், அப்போது நான் அவருக்குப் பெயர்த்துக் கொடுப்பதெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.31 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن هشام، عن ابيه، عن زينب ابنة ابي سلمة، عن ام سلمة رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال " انما انا بشر، وانكم تختصمون الى، ولعل بعضكم ان يكون الحن بحجته من بعض فاقضي نحو ما اسمع، فمن قضيت له بحق اخيه شييا فلا ياخذه، فانما اقطع له قطعة من النار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7169
- Book Index
- 33
Grades
- -
