ஹதீஸ்கள்
#7160
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் மனைவி மாதவிடாயில் இருந்த போது, அவளை நான் மணவிலக்கு (தலாக்) செய்துவிட்டேன். இதை (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்துக் கோபமடைந்தார்கள். பிறகு, “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும். பின்னர் அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவளை மணவிலக்குச் செய்தே தீர வேண்டும் என்று அவருக்குத் தோன்றினால் அவளை மணவிலக்குச் செய்துவிடட்டும்” என்று சொன்னார்கள்.22 அத்தியாயம் :
حدثنا محمد بن ابي يعقوب الكرماني، حدثنا حسان بن ابراهيم، حدثنا يونس، قال محمد اخبرني سالم، ان عبد الله بن عمر، اخبره انه، طلق امراته وهى حايض، فذكر عمر للنبي صلى الله عليه وسلم، فتغيظ فيه رسول الله صلى الله عليه وسلم ثم قال " ليراجعها، ثم ليمسكها حتى تطهر، ثم تحيض فتطهر، فان بدا له ان يطلقها فليطلقها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7160
- Book Index
- 24
Grades
- -
