ஹதீஸ்கள்
#7157
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
(தொடர்ந்து) அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டுப் பின்பு யூதராக மாறிவிட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்தபோது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் வந்தார்கள். “இவருக்கு என்ன?” என்று முஆத் கேட்டார்கள். நான், “இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு யூதராகிவிட்டார்” என்று சொன்னேன். முஆத் (ரலி) அவர்கள், “நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காத வரை அமரமாட்டேன். இதுதான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும்” என்று சொன்னார்கள்.20 அத்தியாயம் :
حدثني عبد الله بن الصباح، حدثنا محبوب بن الحسن، حدثنا خالد، عن حميد بن هلال، عن ابي بردة، عن ابي موسى، ان رجلا، اسلم ثم تهود، فاتى معاذ بن جبل وهو عند ابي موسى فقال ما هذا قال اسلم ثم تهود. قال لا اجلس حتى اقتله، قضاء الله ورسوله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7157
- Book Index
- 21
Grades
- -
