ஹதீஸ்கள்
#7153
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் பள்ளி வாசலிலிருந்து புறப்பட்டுக்கொண்டி ருந்தபோது பள்ளிவாசலின் முற்றத் தருகே எங்களை ஒரு மனிதர் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நீ அதற்காக என்ன முன்னேற்பாடு செய்துவைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். உடனே அம்மனிதர் அடங்கிப்போனவரைப் போன்று காணப்பட்டார். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ தொழு கையோ தானதர்மங்களோ செய்து வைத்திருக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.16 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7153
- Book Index
- 17
Grades
- -