ஹதீஸ்கள்
#7147
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துர் ரஹ்மான் பின் சமுரா! ஆட்சித் தலைமையை (நீங்களாக)க் கேட்காதீர்கள். கேட்டு அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதோடு (தனியாக) விடப்படுவீர்கள். (இறையுதவி உங்களுக்குக் கிடைக்காது. நீங்களாகக்) கேட்காமல் அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (இறைவனின்) உதவி கிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால், சிறந்தது எதுவோ அதைச் செய்துவிட்டு, உங்களது சத்தியத்(தை முறித்த)திற்காகப் பரிகாரம் செய்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.14 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا يونس، عن الحسن، قال حدثني عبد الرحمن بن سمرة، قال قال لي رسول الله صلى الله عليه وسلم " يا عبد الرحمن بن سمرة، لا تسال الامارة، فان اعطيتها عن مسالة وكلت اليها، وان اعطيتها عن غير مسالة اعنت عليها، واذا حلفت على يمين فرايت غيرها خيرا منها، فات الذي هو خير، وكفر عن يمينك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7147
- Book Index
- 11
Grades
- -
