ஹதீஸ்கள்
#7145
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன் சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படை வீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு கட்டத்தில்) படைவீரர்கள்மீது கோபம் கொண்டு, “நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?” என்று கேட்டார். அவர்கள், “ஆம்” என்றனர். அவர், “விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்துவிடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகின்றேன்” என்று சொன்னார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டினர். அதில் நுழைய நினைத்தபோது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றுகொண்டனர். அவர்களில் ஒருவர், “(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி னோம்; அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?” என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது; அவருடைய கோபமும் தணிந்தது. பிறகு நபி (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒரு போதும் வெளியேறியிருக்கமாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்” என்று சொன்னார்கள்.12 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، عن علي رضى الله عنه قال بعث النبي صلى الله عليه وسلم سرية، وامر عليهم رجلا من الانصار وامرهم ان يطيعوه، فغضب عليهم وقال اليس قد امر النبي صلى الله عليه وسلم ان تطيعوني قالوا بلى. قال عزمت عليكم لما جمعتم حطبا واوقدتم نارا، ثم دخلتم فيها، فجمعوا حطبا فاوقدوا، فلما هموا بالدخول فقام ينظر بعضهم الى بعض، قال بعضهم انما تبعنا النبي صلى الله عليه وسلم فرارا من النار، افندخلها، فبينما هم كذلك اذ خمدت النار، وسكن غضبه، فذكر للنبي صلى الله عليه وسلم فقال " لو دخلوها ما خرجوا منها ابدا، انما الطاعة في المعروف
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7145
- Book Index
- 9
Grades
- -
