ஹதீஸ்கள்
#7135
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுக்கத்துடன் என்னிடம் வந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கிறது. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்கு இன்று திறக்கப்பட்டுள்ளது” என்று சொல்லி, தமது கட்டை விரலையும் அதற்கடுத்த விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடையே நல்லவர்கள் இருக்க, நாங்கள் அழிந்துபோவோமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; தீமை பெருகிவிடும்போது” என்று சொன்னார்கள்.67 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7135
- Book Index
- 82
Grades
- -