ஹதீஸ்கள்
#7131
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனால் அனுப்பிவைக்கப் பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக, உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே கருத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن قتادة، عن انس، رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " ما بعث نبي الا انذر امته الاعور الكذاب، الا انه اعور، وان ربكم ليس باعور، وان بين عينيه مكتوب كافر ". فيه ابو هريرة وابن عباس عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7131
- Book Index
- 78
Grades
- -
