ஹதீஸ்கள்
#7128
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒருநாள்) நான் உறங்கிக்கொண்டி ருந்தபோது நான் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருப்பதாக (கனவில்) கண்டேன். அப்போது மா நிறமான படிந்த தலைமுடியுடைய மனிதர் ஒருவரின் தலையிலிருந்து ‘தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்க’ அல்லது ‘சிந்திக்கொண்டிருக்க’க் கண்டேன். “இவர் யார்?” என்று கேட்டேன். “மர்யமின் மைந்தர் (ஈசா)” என்று சொன்னார்கள். பிறகு நான் திரும்பிப் பார்த்தபடியே சென்றபோது (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சை போன்று ஒரு கண் குருடான, சுருட்டைத் தலைமுடியுடைய, சிவப்பான, பருமனான மனிதன் ஒருவன் அங்கிருந்தான். “இவன்தான் தஜ்ஜால்; மக்களில் இவனுக்கு உருவ அமைப்பில் ஒப்பானவன் ‘இப்னு கத்தன்’ எனும் குஸாஆ குலத்து மனிதன் ஆவான்” என்று சொன்னார்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7128
- Book Index
- 75
Grades
- -