ஹதீஸ்கள்
#7112
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அபுல் மின்ஹால் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு ஸியாத் (பஸ்ராவிலிருந்து வெளியேறி ஷாம் நாட்டுக்கு வர, அங்கு) மர்வான் பின் அல்ஹகம் ஷாம் நாட்டில் (கிளர்ச்சியை ஆரம்பித்து) இருந்தபோது, மேலும் (அதே நேரத்தில்) மக்காவில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பஸ்ராவில் காரிஜிய்யாக்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது நான் என் தந்தையுடன் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அன்னார் பேரீச்சங்கழியாலான உப்பரிகை ஒன்றில் அமர்ந்திருக்க அவர்களது இல்லத்தினுள் நுழைந்து அவர்களிடம் நாங்கள் அமர்ந்து கொண்டோம்.42 அப்போது என் தந்தை (சலாமா) அபூபர்ஸா (ரலி) அவர்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் எண்ணத்தில் பேசத் தொடங்கினார்கள். “அபூபர்ஸா! மக்கள் எந்த விஷயத்தில் சிக்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று என் தந்தை கேட்டார்கள். அப்போது அபூபர்ஸா (ரலி) அவர்கள் பேசி நான் கேட்ட முதல் விஷயம் இதுதான். (அன்னார் கூறினார்கள்:) குறைஷிக் குடும்பங்கள் சிலவற்றின் மீது நான் கோபம் கொண்டவனாய் மாறியதற்கு அல்லாஹ்விடம் நற்பலனை எதிர்பார்க்கிறேன். (குறைஷியரிடம் நான் கூறினேன்:) அரபுகளே! நீங்கள் இழிவு, பொருளாதாரக் குறைவு மற்றும் வழிகேடு ஆகிய (மோசமான) நிலைகளில் இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அல்லாஹ், இஸ்லாத்தின் மூலமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகவும் உங்களைக் காப்பாற்றினான். அதன் விளைவாக நீங்கள் காண்கின்ற இந்த (கண்ணியம், வளமிக்க வாழ்வு, நல்வழி ஆகிய நல்ல) நிலைகளை அடைந்தீர்கள். இந்த உலக (மோக)ம் எத்தகைய தென்றால், உங்களுக்கிடையே அது சீர்கேட்டை(யும் குழப்பத்தையும்) விளைவித்துவிட்டது. ஷாம் நாட்டி óருக்கின்றாரே அவர் (மர்வான் பின் அல்ஹகம்), அல்லாஹ்வின் மீதாணையாக! உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகின்றார். (இங்கு பஸ்ராவில்) உங்கள் முன்னே இருக்கின்றார்களே அவர்களும் (காரிஜிய்யாக்கள்), அல்லாஹ்வின் மீதாணையாக! உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகின்றார்கள். மக்காவில் இருக்கின்றாரே அவரும் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்) உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகின்றார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7112
- Book Index
- 59
Grades
- -