ஹதீஸ்கள்
#7110
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா (ரலி) அவர்கள் என்னை அலீ (ரலி) அவர்களிடம் அனுப்பி, “இப்போது அவர் (அலீ-ரலி) உன்னிடம் உம் தோழர் (உசாமா, ஜமல் மற்றும் ஸிஃப்பீன் போர்களில் எனக்கு ஆதரவளிக்காமல்) பின் வாங்கியதற்குக் காரணம் என்ன? என்று கேட்பார். நீங்கள் சிங்கத்தின் தாடைக்குள் இருந்தாலும் உங்களுடன் இருப்பதையே நான் விரும்புவேன்; ஆனால், (முஸ்லிம்களிடையே நடக்கும்) இந்தச் சண்டையில் எனக்கு உடன்பாடில்லை என்று நான் கூறுவதாக அவரிடம் சொல்” என்று சொன்னார்கள். (நானும் அவ்வாறே அலீ (ரலி) அவர்களிடம் சென்று சொன்னேன்.) அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தி லிருந்து) எனக்கு எதுவும் கொடுக்க வில்லை. ஆகவே, நான் ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி), அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) ஆகியோரிடம் சென்றேன். அவர்கள் எனது வாகனத்தில் அது (சுமக்க முடிந்த அளவுக்கு) எனக்காக (அன்பளிப்புப் பொருள்களை) ஏற்றியனுப்பினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال قال عمرو اخبرني محمد بن علي، ان حرملة، مولى اسامة اخبره قال عمرو وقد رايت حرملة قال ارسلني اسامة الى علي وقال انه سيسالك الان فيقول ما خلف صاحبك فقل له يقول لك لو كنت في شدق الاسد لاحببت ان اكون معك فيه، ولكن هذا امر لم اره، فلم يعطني شييا، فذهبت الى حسن وحسين وابن جعفر فاوقروا لي راحلتي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7110
- Book Index
- 57
Grades
- -
