ஹதீஸ்கள்
#7087
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடம் சென்றேன். அவர் “இப்னுல் அக்வஉ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தபின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?” என்று கேட்டார். நான், “இல்லை; ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்” என்று சொன்னேன். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் (மதீனாவிலிருந்து) வெளியேறி ‘ரபதா’ என்னுமிடத் திற்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்துகொண்டார்கள். அப்பெண் மூலம் அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தன. அங்கேயே வசித்துவந்த சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள், தாம் இறப்பதற்குச் சில நாட்கள் முன்புதான் (அங்கிருந்து திரும்பி வந்து) மதீனாவில் தங்கினார்கள்.26 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7087
- Book Index
- 38
Grades
- -