ஹதீஸ்கள்
#7078
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள். மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர் கள்” என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவுக்கு மௌனமாக இருந்தார்கள்.) பிறகு “இது நஹ்ர் உடைய (துல்ஹிஜ்ஜா 10ஆம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம், அல்லாஹ்வின் தூதரே” என்று சொன்னோம். நபியவர்கள், “இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் செல்வங்களும் உங்களது மானமும் உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே” என்று கூறிவிட்டு, “(நான் வாழ்ந்த இதுகாலம்வரை உங்களிடம் இறைச்செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா?” எனக் கேட்டார்கள். நாங்கள், “ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்)” என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் “இறைவா! நீயே சாட்சி!” என்று சொன்னார்கள். பிறகு (மக்களிடம்), “இங்கு வந்திருப் பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர், தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக்கொள்பவரிடம் தெரிவிக்கலாம்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நபி (ஸல்) அவர்கள் கூறியபடியே நடந்தது. (நினைவாற்றல் குறைந்தவர்கள் தம்மைவிடச் சிறந்த நினைவாற்றல் உள்ளோரிடம் அவற்றைத் தெரிவித்தார்கள்.) மேலும், நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பின்னால் ஒருவரையொருவர் பிடரியில் வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் நீங்கள் மாறிவிட வேண்டாம்” என்றும் (அன்றைய உரையில்) குறிப்பிட்டார்கள்.19 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஹள்ரமீ (ரஹ்) அவர்கள் ஜாரியா பின் குதாமா என்பவரால் (உயிருடன்) கொளுத்தப்பட்ட நாளில் (ஜாரியா தம் ஆட்களிடம்), “அபூபக்ரா (ரலி) அவர்களை ஏறிப்பாருங்கள் (அவர் நமக்கு ஆதரவாளரா என்பதைக் கண்டுவாருங்கள்)” என்றார். அப்போது மக்கள், “இதோ அபூபக்ரா (ரலி) அவர்கள் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினர். அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள், “மக்கள் என்னிடம் (என்னைத் தாக்க) வந்தால் அப்போது (நான் அவர்களைத் தடுக்க) ஒரு மூங்கில் குச்சியைக்கூட எடுக்கமாட்டேன்” என்று சொன்னார்கள் என என் தாயார் என்னிடம் தெரிவித்தார்கள்.20 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، حدثنا قرة بن خالد، حدثنا ابن سيرين، عن عبد الرحمن بن ابي بكرة، عن ابي بكرة، وعن رجل، اخر هو افضل في نفسي من عبد الرحمن بن ابي بكرة عن ابي بكرة ان رسول الله صلى الله عليه وسلم خطب الناس فقال " الا تدرون اى يوم هذا ". قالوا الله ورسوله اعلم. قال حتى ظننا انه سيسميه بغير اسمه. فقال " اليس بيوم النحر ". قلنا بلى يا رسول الله. قال " اى بلد، هذا اليست بالبلدة ". قلنا بلى يا رسول الله. قال " فان دماءكم، واموالكم، واعراضكم، وابشاركم عليكم حرام، كحرمة يومكم هذا، في شهركم هذا، في بلدكم هذا، الا هل بلغت ". قلنا نعم. قال " اللهم اشهد، فليبلغ الشاهد الغايب، فانه رب مبلغ يبلغه من هو اوعى له فكان كذلك قال لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض ". فلما كان يوم حرق ابن الحضرمي، حين حرقه جارية بن قدامة. قال اشرفوا على ابي بكرة. فقالوا هذا ابو بكرة يراك. قال عبد الرحمن فحدثتني امي عن ابي بكرة انه قال لو دخلوا على ما بهشت بقصبة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7078
- Book Index
- 29
Grades
- -
