ஹதீஸ்கள்
#7050
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (மறுமை நாளில்) உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அங்கு யாருக்கு வர முடிகிறதோ அவர் அதை அருந்துவார். யார் அதை அருந்துகிறாரோ அவருக்கு அதன் பிறகு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வரு வார்கள். அவர்களை நான் அறிவேன்; அவர்களும் என்னை அறிந்துகொள் வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அறிவிப் பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை மக்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு, “நீங்கள் இவ்வாறுதான் சஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று வினவினார்கள். நான், “ஆம்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் இதை அறிவித்ததற்கு நான் சாட்சி. அவர்கள் தமது அறிவிப்பில் கூடுதலாக (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்: “அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்தான்” என்று நபியவர்கள் கூறியதற்கு, “உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும். உடனே நான், “எனக்குப் பிறகு (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிóருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப்படுத்து வானாக!” என்று சொல்வேன்.5 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا يعقوب بن عبد الرحمن، عن ابي حازم، قال سمعت سهل بن سعد، يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول " انا فرطكم، على الحوض، من ورده شرب منه، ومن شرب منه لم يظما بعده ابدا، ليرد على اقوام اعرفهم ويعرفوني، ثم يحال بيني وبينهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7050
- Book Index
- 3
Grades
- -
