ஹதீஸ்கள்
#7012
ஸஹீஹ் அல்-புகாரீ - Interpretation of Dreams
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: உன்னை நான் மணமுடிப்பதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவரிடம், “(அந்தத் துணியை) விலக்குங்கள்” என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) “இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்துகொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான், “(இத்துணியை) நீக்குங்கள்” என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) “இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன்.28 அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا ابو معاوية، اخبرنا هشام، عن ابيه، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " اريتك قبل ان اتزوجك مرتين، رايت الملك يحملك في سرقة من حرير فقلت له اكشف. فكشف فاذا هي انت، فقلت ان يكن هذا من عند الله يمضه. ثم اريتك يحملك في سرقة من حرير فقلت اكشف. فكشف فاذا هي انت فقلت ان يك هذا من عند الله يمضه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7012
- Book Index
- 30
Grades
- -
