ஹதீஸ்கள்
#6967
ஸஹீஹ் அல்-புகாரீ - Tricks
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு மனிதனே! என்னிடம் நீங்கள் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்குச் சாதுரியம்மிக்கவராக இருக்கக்கூடும். மேலும், நான் (அந்தச் சாதுரியமான வரிடமிருந்து) செவியுறுவதற்கேற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, (எவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் சிறிதளவை (அவருக்குரியது) என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்துவிடுகின்றேனோ அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் பெயர்த்துக் கொடுக்கிறேன். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، عن سفيان، عن هشام، عن عروة، عن زينب ابنة ام سلمة، عن ام سلمة، عن النبي صلى الله عليه وسلم قال " انما انا بشر، وانكم تختصمون، ولعل بعضكم ان يكون الحن بحجته من بعض، واقضي له على نحو ما اسمع، فمن قضيت له من حق اخيه شييا، فلا ياخذ، فانما اقطع له قطعة من النار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Tricks
- Hadith Index
- #6967
- Book Index
- 14
Grades
- -
