ஹதீஸ்கள்
#6961
ஸஹீஹ் அல்-புகாரீ - Tricks
முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தவணைமுறைத் திருமணம் (நிகா ஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது தவணைமுறைத் திருமணத்திற்கும் நாட்டுக்கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கும் தடை விதித் தார்கள்” என்று கூறினார்கள்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. “ஒரு மனிதர் தந்திரமாகத் தவணை முறைத் திருமணம் செய்தால் அத்திரு மணம் செல்லாது” என்று சிலர் கூறினர். வேறுசிலரோ, “அந்தத் திருமணம் செல்லும்; ஆனால் (அதில் விதிக்கப் பட்ட) முன்நிபந்தனை செல்லாது” என்று கூறினர். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن عبيد الله بن عمر، حدثنا الزهري، عن الحسن، وعبد الله، ابنى محمد بن علي عن ابيهما، ان عليا رضى الله عنه قيل له ان ابن عباس لا يرى بمتعة النساء باسا. فقال ان رسول الله صلى الله عليه وسلم نهى عنها يوم خيبر، وعن لحوم الحمر الانسية. وقال بعض الناس ان احتال حتى تمتع، فالنكاح فاسد. وقال بعضهم النكاح جايز والشرط باطل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Tricks
- Hadith Index
- #6961
- Book Index
- 8
Grades
- -
