ஹதீஸ்கள்
#6950
ஸஹீஹ் அல்-புகாரீ - (Statements made under) Coercion
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் துணைவியாரான சாரா அவர்களுடன் தமது தாயகத்தைத் துறந்து சென்றார்கள். ‘மன்னன் ஒருவன்’ அல்லது ‘கொடுங்கோலன் ஒருவன்’ இருந்த ஓர் ஊருக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தார்கள். (இந்தச் செய்தியறிந்த) அவன் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் ஆளனுப்பி “(உம்முடனிருக்கும்) அப்பெண்ணை என்னிடம் அனுப்பிவை” என்று கூறினான். இப்ராஹீம் (அலை) அவர்களும் (வேறு வழியின்றி) அவ்வாறே சாரா அவர்களை அனுப்பிவைத்தார்கள். அவன் (தவறான எண்ணத்துடன்) சாரா அவர்களை நோக்கி எழுந்து வந்தான். சாரா அவர்கள் எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்து, தொழுதுவிட்டு, “அல்லாஹ்வே நான் உன்னையும் உன்னுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிரு(ப்பது உண்மையாக இரு)ந்தால் இந்த நிராகரிப்பாளன் என்னை ஆட்கொள்ள விடாதே” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பால்) கால்களால் உதைத்துக்கொண்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.14 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، حدثنا شعيب، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " هاجر ابراهيم بسارة، دخل بها قرية فيها ملك من الملوك او جبار من الجبابرة، فارسل اليه ان ارسل الى بها. فارسل بها، فقام اليها فقامت توضا وتصلي فقالت اللهم ان كنت امنت بك وبرسولك فلا تسلط على الكافر، فغط حتى ركض برجله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- (Statements made under) Coercion
- Hadith Index
- #6950
- Book Index
- 11
Grades
- -
