ஹதீஸ்கள்
#6949
ஸஹீஹ் அல்-புகாரீ - (Statements made under) Coercion
ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் கணவருடைய தந்தை கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில்) அரசாங்க அடிமைகளில் ஒருவன் (ஆட்சியாளர் அதிகாரத்திற்குட்பட்ட) ‘குமுஸ்’ நிதியிலுள்ள ஓர் அடிமைப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டான். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அவனுக்கு (ஐம்பது) சாட்டையடி கொடுத்து (ஆறு மாத காலத்திற்கு) அவனை நாடுகடத்தவும் செய்தார்கள். ஆனால், அந்த அடிமையால் பலவந்தப்படுத்தப்பட்டாள் என்பதால் அந்த அடிமைப் பெண்ணுக்கு அவர்கள் கசையடி தண்டனை வழங்கவில்லை. அடிமையல்லாத ஒருவன் கற்பழித்துவிட்ட கன்னியான அடிமைப்பெண் குறித்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: கன்னிகழியாதிருந்த அந்த அடிமைப் பெண்ணுக்குரிய விலையை நீதிபதி நிர்ணயி(த்து கன்னி கழிந்ததால் ஏற்பட்ட இழப்பீட்டைக் கற்பழித்தவனிடமிருந்து வசூலி)ப்பார். மேலும், (கற்பழித்த) அவனுக்குக் சாட்டையடி தண்டனை வழங்கப்படும். ஆனால், கன்னிகழிந்த அடிமைப் பெண்ணுக்கு இழப்பீடு ஏதும் வழங்க வேண்டுமென்று அறிஞர்களின் தீர்ப்புகளில் காணப்படவில்லை. ஆயினும், அவளைக் கற்பழித்தவனுக்குத் தண்டனை உண்டு. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- (Statements made under) Coercion
- Hadith Index
- #6949
- Book Index
- 10
Grades
- -